states

img

சாதி மறுப்புத் திருமணம் செய்த தலித் இளைஞர் அடித்துக் கொலை... ஆந்திராவில் அரங்கேறிய சாதி ஆணவ வெறியாட்டம்

விஜயவாடா:
ஆந்திராவின் கர்னூல் மாவட் டத்தைச் சேர்ந்தவர் ஆடம் ஸ்மித்(30). ‘மாதிகா’ என்ற தலித் வகுப்பைச் சேர்ந்தவர். இவரும், ‘குருபா’எனும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த  மகேஸ்வரி(24) என்ற இளம்பெண்ணும் 2020 நவம்பர் 12 அன்று ஹைதராபாத்திலுள்ள ஆர்ய சமாஜத்தில் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.ஆரம்பம் முதலே மகேஸ்வரியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அவரது பெற்றோர்,திருமணத்திற்குப் பிறகு, ஆடம்ஸ்மித்தை கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளனர். அச்சமடைந்த ஸ்மித்தும் மகேஸ்வரியும், பாதுகாப்பு கேட்டு கர்னூல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடையவே, அங்கு மகேஸ்வரியின் குடும்பத் தினரை வரவழைத்த காவல் துறையினர், தம்பதியினருக்கு எந்த தொந்தரவும் அளிக்கக் கூடாதுஎன்று எச்சரித்து அனுப்பியுள்ளனர். காதல் தம்பதிகளும், இருந்தஊரைவிட்டு, அடோனி என்றவேறொரு பகுதிக்கு குடிபெயர்ந் துள்ளனர். 

எனினும் சாதிவெறி அடங்காத மகேஸ்வரியின் குடும்பத்தினர், கடந்த வியாழனன்று அடோனிக்கே சென்று, ஆடம் ஸ்மித்தை,மிகக் கொடூரமான முறையில், இரும்புக் கம்பியால் அடித்தே கொன்றுள்ளனர்.
தனது கணவரின் சாவுக்கு தனது தந்தை சின்ன வீரண்ணா,  பெரியப்பா பெத்த வீரண்ணா ஆகியோரே காரணம் என்று மகேஸ்வரிஅளித்த புகாரின் பேரில், அவர்கள்இருவரையும் போலீசார் தற் போது கைது செய்துள்ளனர்.

;